Monday, February 23, 2015

சாமுராய் - மூங்கில் காடுகளே

படம் : சாமுராய்
பாடலாசிரியர்: வைரமுத்து

மூங்கில் காடுகளே
வண்டு முனகும் பாடல்களே
தூர சிகரங்களில்
தண்ணீர் துவைக்கும் அருவிகளே
ஹொ ஹொ ஹொ

இயற்கை தாயின் மடியில் பிரிந்து
எப்படி வாழ இதயம் தொலைந்து
சலித்து போனேன் மனிதனாய் இருந்து
பார்க வேண்டும் பறவையாய் திரிந்து திரிந்து
பறந்து பறந்து

சேற்று தண்ணீரில் மலரும் சிவப்பு தாமரையில்
சேறு மணப்பதில்லை பூவின் ஜீவன் மணக்கிறது
வேரை அறுதாலும் மரங்கள் வெறுப்பை உமிழ்வதில்லை
அறுத்த நதியின் மேல் மரங்கள் ஆனந்த பூசொரியும்
தாமரை பூவாய் மாறேனோ ஜென்ம சாபலீயங்கள் காணேனோ
மரமாய் நானும் மாறேனோ என் மனித பிறவியில் உய்யேனோ
லய்லொ முயலொ பருகும் வன்னம் எங்கை பனி துளி ஆகேனோ

உப்பு கடலோடு மேகம் உற்பதி ஆனாலும்
உப்பு தண்ணீரை மேகம் ஒரு போதும் சிந்தாது
மலையில் விழுந்தாலும் சூரியன் மறித்த போவதில்லை
நிலவுக்கு ஒளியூட்டி தன்னை நீட்டிது கொள்கிறதே
மேகமாய் நானும் மாறேனோ
அதன் மேன்மை குணங்கள் காண்பேனோ
சூரியன் போலவே மாறேனோ
என் ஜோதியில் உலகை ஆள்வேனோ
ஜனனம் மரணம் தெரியா வண்ணம்
நானும் மழை துளி ஆவேனோ